கூடு சேர்ந்த பறவைகள்❤

கரை வந்த பிறகுதான் புரியும் கடலின் அருமை
 முடிவில்லா முடிவு வந்தவுடன் தான் புரிய
ஆரம்பிக்கின்றன சில மனிதர்கள் (நண்பர்கள்)....

 எதற்கு என்று ஆரம்பித்த ஒன்று.....
 எதற்கு என்பது தெரிய வைத்தது கடைசி சில நிமிடங்கள்
பசுமை போர்திய காட்டிற்குள் பாடலும் பாசமும்.....

 நேற்று என்பது நினைக்க வைக்கிறது,
 இந்த நொடி.......
 மறக்க முடியாத நடனங்களும் பார்க்க முடியாத இரவுகளும்💓

கெடுக்கப்பட்ட தூக்கத்திற்கு
கொடுக்கப்பட்ட விலை
 சிரிப்பும், அன்பும், காதலும்,........
முடிந்தது என்று கட்டித் தழுவி நண்பர்கள் ....
சிரிப்பிற்கு பஞ்சமில்ல நான்கு நாட்கள்......

 கர்நாடகா ஆற்றுநீர் பிரதிபலித்தது பலரின்
உண்மையான முகங்களை....👪
மறுக்கப்படாத நேசமும்.... மறைக்கப்படாத அக்கறையும்.... கொடுக்கப்படாத காதலும் என்றுமே நெஞ்சில் மிச்சம்

வெட்டிக் கொண்டாடிய கடைசி நொடியில்
 வென்றது காலம்......................😔
திரும்பக் கிடைக்கப் போவதில்லை என்று .

பறவையின் குணமே பறப்பதுதான்
பறந்த பறவைகள் நாம் கூடு என்றும் கலைய
போவதில்லை, நினைவாக நெஞ்சில் பத்திரமாய்💓
எல்லாம் இருந்தும் ஏதோ ஒரு குறை........

 வகுப்பறை என்னும் கர்ப அறையில்
 பத்திரமாய் வளர்க்கப்பட்ட குழந்தைகள் நாம்
குணம் எவ்வாறாயினும் குளம் ஒன்று தான்.......✊

காற்றின் பாடலும், நீரில் நடனமும், மழையின் இதமும்
 குளிரின் வெப்பமும் அழகான நினைவுகளை
மனதில் ஏற்றி பல மாற்றங்களை கொண்டு
சேர்த்தது......
கனவுகளும், பிரிவுகளும்,ஏக்கங்களும்
கொண்ட பயணம் முடிந்தது ஆனால்......
 நட்பினால் சேர்க்கப்பட்ட நம் பயணம் என்றும் முடிவதில்லை...
என்னைஎனக்கு உணர வைத்த என் நண்பர்களே❤


                                                                                உங்களை  நேசித்த ஒருவனாய்
                                                                                                  நான்

Comments

Post a Comment

Popular posts from this blog

ரசிகன்❤️

என் முதல் மனிதி

செப்டம்பர் 7