எல்லாம் அவன்
நான் சிக்கித் தவித்து திணறிய பல நேரங்கள் எந்த ஒருவனால் என்னை உருவாக்க முடியுமோ..... எந்த ஒருவனால் என்னை ஊக்கப் படுத்த முடியுமோ..... எந்த ஒருவனால் என்னை சரிசெய்ய முடியுமோ.... எந்த ஒருவனால் என்னை சமாதானம் செய்ய முடியுமோ..... அந்த ஒருவன் மீண்டும் என் வாழ்வில் தட்டிக்கொடுத்து நடக்க வைத்தான்........ இந்த விளக்கு அணையும் போதெல்லாம் தீக்குச்சியாய் மாறி அவன் மீண்டும் வெளிச்சம் தந்தான்.. அளவு கடந்த கோபம் அவன் மீது .... அளவு கடந்த பாசம் அவன் மீது....... அளவுகடந்த காதல் அவன் மீது ...... என் காதலை வெளிப்படுத்த தெரியாத காரணமே அவன்மீது கொண்ட கோபம்..... என் கண் பார்த்த கடவுளே என்னை கல்லை வணங்க சொல்கிறது என் கல்லும் அவனே என் கடவுளும் அவனே... வலியை மறந்து சுமையை மறந்து பல நாட்கள் புன்னகையுடன் தோன்றிருக்கிறான் எங்கள் முன்னர் எங்களுக்காக அவன் எடுத்த ஓட்டம் இன்னும் நிற்கவில்லை.. உங்களுக்காகத்தான் என்று அவன் கூறும் போதெல்லாம் என் மனம் நிலைகுலையும்..... எத்தனையோ ஆண் கடவுள்களை வணங்கி இருக்கலாம் அவர்கள் எல்லாம் ஒருசேர அவனே எந்தன் அப்பன் அவன் ....... அவன் அணியும் சட்டை பொத்தானும் அ