Posts

Showing posts from September, 2018

உறவோடு உறவாடு

        கா க்கை அறியுமோ அது கருங்குயிலின் முட்டை  என்று,தன்னின் முட்டை என்றே அடைகாத்து  பொறிக்கும் அதுவே உறவு...... அந்த மழை மேகமும் ஆனந்தமாய் கண்ணீர்  வடித்தது அந்த பந்தகளின் பாச இணைவை  கண்டு .... நிழலும் பிரியும் என்பான் மூடன்,நிழல் மறையும்  என்னை விட்டு ஒருநாளும் விலகாது..மறையும்போது பாம்போ கீரியோ நாங்கள்,விலகாமல்  ஒருகூட்டு பறவையாய் நாங்கள் என் உடன் பிறந்தவர்கள்💛 நான் பார்த்த என் மூத்த தலைமுறையின் ஒரு ஆசை முத்தம் போதும்,பூந்தேனின் சுவையை வண்டு அறியுமோ நான் அறிவேன்..... அத்தையோ அவள் எனக்கு ஒரு நாளும் விடாமல் என் பெயரை அழைக்க, மழை நின்ற பின் மழை துளி சொட்டுமோ அது சொட்டும் அவளின் அன்பை கண்டு......! மாமனோ அவன் மாமன் தோழுக்கு தோழாய் துணை நிற்ப்பவன், என் தந்தை அவன் சுடும் போடு உன் மடியல்லவா என்னை குளிர செய்தன.....! அப்பனோ அவன் அப்பன் என் சித்தப்பன்  என்னை மெருகேற்றி வளர்த்தவன்,உன் துணையின்றி நான் பிழைத்திருப்பேனோ புரிதலுடன்....! அம்மாவோ அவள் அம்மா என் சின்னம்மா உணவிற்க்கோ, ஊக்கத்திற்க்கோ வந்ததில்லை பஞ்சம் உன்னிடம்...!

கண்ணீர்

நினைத்தது ஒன்று நடந்தது ஒன்று நான் நினைத்தேன் வந்தாய் நீ............! நடந்தது ஒன்று வந்தாய் நீ............! எதிர்பார்த்தேன், ஏக்கம் கொண்டேன், இழந்தேன்!  இருந்தாய் நீ !!! தனிமை,வெறுமை,வெறுப்பு !    இருந்தாய் நீ!!! வியப்பு ,மகிழ்ச்சி, கூடல் !   இருந்தாய் நீ!!! பிறப்பு,இறப்பு,இழப்பு !   இருந்தாய் நீ!!! காதல், துக்கம்,காற்று,மழை !  இருந்தாய் நீ!!! வெற்றி,தோல்வி,கோபம்!!   இருந்தாய் நீ!!!! அவமானம், பாரம், வலி  இருந்தாய் நீ!!! சிலரிடம் நீ வடிந்தது கண்டு , நான் வடித்தேன்!!!!!! களிப்பில் வடிந்தாய் உன்மேல்  ஆசை கொண்டேண். கலங்கியதால் வடிந்தாய் உன்மேல்  வெறுப்பு கொண்டேண். ஏமாறும் போதும் வந்தாய் ,ஏமாற்றும் போதும் வந்தாய்!!! உன்னிடம் மண்டியிட்டு கேட்டுக்கொள்கிறேன் சுற்றி இருப்பவர்களின் கண்ணில்.....   ஒரு  நாளும் பார்த்துவிட கூடாது உன்னை கலங்கிய நிலையில்😭😢               அழுததனால் நான்                   கா.ராஜ சேகர்

செப்டம்பர் 7

                                                                                                           தோழனாய் என் அப்பா ! !                                                                                                                காதலாய் என் அம்மா !! காதலே என் காதலே நீ பிறந்த தினம் இன்று மாலை மாற்றி கைகள் கோர்த்து இருமணம் இணைய          அந்த  காதலும் பொறாமை பட்ட தினம்.....!! என் தோழனும்  என் காதலும் இணைந்த தினம்!!!!!.             அன்று முதல் இன்று வரை 21 ஆண்டுகள் நான்,             உங்களிடம் கண்டது புரிதல் ஒன்றே...........             என் காதலுக்கு யாரும் இல்லை ! எல்லாமாய்             என் தோழன்...........!! கண்டவுடன் காதல், கற்பனை வாழ்க்கை நனவாய் கண்டேன்  உங்களிடம் .......              ஒரு நாள் பிறிவையும்  ஏற்க மறுக்கும்              என்  தோழனின் அன்பு !              ஒரு வேளை பிரிவையும் ஏற்க மறுக்கும்              என்  காதலின் எதார்த்தம் ! இருவரும்  கைகள் கோர்த்து நடந்த அந்த பல வேளைகள் என் மனதில் சுமந்திருந்தேன் ! கதைகள் பல, அழுகை சில............ நம