செப்டம்பர் 7


                                                                                                           தோழனாய் என் அப்பா !!
                                                                                                               காதலாய் என் அம்மா !!

காதலே என் காதலே நீ பிறந்த தினம் இன்று
மாலை மாற்றி கைகள் கோர்த்து இருமணம்
இணைய 
       
அந்த  காதலும் பொறாமை பட்ட தினம்.....!!
என் தோழனும்  என் காதலும் இணைந்த தினம்!!!!!.
            அன்று முதல் இன்று வரை 21 ஆண்டுகள் நான்,
            உங்களிடம் கண்டது புரிதல் ஒன்றே...........
            என் காதலுக்கு யாரும் இல்லை ! எல்லாமாய்
            என் தோழன்...........!!

கண்டவுடன் காதல், கற்பனை வாழ்க்கை
நனவாய் கண்டேன்  உங்களிடம் .......
             ஒரு நாள் பிறிவையும்  ஏற்க மறுக்கும்
             என்  தோழனின் அன்பு !
             ஒரு வேளை பிரிவையும் ஏற்க மறுக்கும்
             என்  காதலின் எதார்த்தம் !
இருவரும்  கைகள் கோர்த்து நடந்த அந்த பல
வேளைகள் என் மனதில் சுமந்திருந்தேன் !

கதைகள் பல, அழுகை சில............

நம் வீட்டு வாசலும் புறம் பேசியது உங்களின்
அளவில்லா காதலின் மேல் பொறாமை கொண்டு

இரு உயிருக்கும் ஒரு இதய துடிப்பே என்று அறிந்தேன்
அந்த சில கசந்த வேளைகளில்.........!
உங்களின் பிறிவுக்காக அந்த கடவுளும் தேடுவான்
கடலில் விட்ட  சிறு துளியை !!!!!!!

உண்மையும் உறவும் , உடலும் உயிரும்
வேறும் மரமும் , காதலும் புரிவும்
தூக்கமும் தலையணையும்
கண்ணும் இமையும் ,நெல்லும் மணியும்
என்றும் தொடர ................................................................!!

                                                             

                                                                                            உங்களை காதலித்ததால்
                                                                                               
                                                                                                  நான் (ராஜசேகர் .கா )
















Comments

Post a Comment

Popular posts from this blog

ரசிகன்❤️

என் முதல் மனிதி